செய்திகள்

இந்தியா உடனான கிரிக்கெட் தொடர்: சென்னை வந்தடைந்தது ஆஸ்திரேலிய அணி

Published On 2017-09-09 04:10 IST   |   Update On 2017-09-09 04:10:00 IST
இந்தியா உடனான ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய அணி சென்னை விமான நிலையத்திற்கு நேற்று வந்தடைந்தது.
சென்னை:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 17-ந்தேதி நடக்கிறது.

இதற்கான டிக்கெட் விற்பனை தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி நேற்றிரவு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது. பின்னர், அவர்கள் பேருந்து மூலம் நட்சத்திர ஓட்டலுக்கு சென்றனர். இதனால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Similar News