இந்தியா

டிரைவர் இல்லாமல் ஓடிய அரசு பஸ்- சினிமா பாணியில் காப்பாற்றிய கண்டக்டர்

Published On 2022-08-04 11:11 GMT   |   Update On 2022-08-04 11:11 GMT
  • எதிரே வேகமாக வந்த கார் குண்டும் குழியுமாக உள்ள சாலையில் இறங்கியதால் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ்சின் மீது மோதி கவிழ்ந்தது.
  • கார் பஸ் மீது மோதிய வேகத்தில் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் சீட்டிலிருந்து எகிறி சாலையில் விழுந்தார்.

திருப்பதி:

ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருவதால் சாலைகள் போக்குவரத்துக்கு லாயக்கு இன்றி குண்டும் குழியுமாக உள்ளது.

பொட்டி ஸ்ரீ ராமுலு மாவட்டம் காவனி பட்டினத்தில் இருந்து நெல்லூர் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே வேகமாக வந்த கார் குண்டும் குழியுமாக உள்ள சாலையில் இறங்கியதால் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ்சின் மீது மோதி கவிழ்ந்தது. கார் பஸ் மீது மோதிய வேகத்தில் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் சீட்டிலிருந்து எகிறி சாலையில் விழுந்தார்.

இதனால் பஸ் தாறுமாறாக ஓடியது. சுமார் 150 மீட்டர் தூரம் டிரைவர் இல்லாமல் பஸ் ஓடியது பஸ்சில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.

இதனால் பதறிபோன பஸ் கண்டக்டர் சினிமா பாணியில் வேகமாக ஓடிச் சென்று டிரைவர் சீட்டில் அமர்ந்து பிரேக் பிடித்து பஸ்சை சாலையின் ஓரமாக நிறுத்தினார்.

பதட்டத்தில் இருந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவனி பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த பஸ் டிரைவர் மற்றும் காரில் இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கண்டக்டர் மட்டும் பஸ்சை நிறுத்தாமல் இருந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு அசம்பாவிதம் நடந்து இருக்கும். சாமர்த்தியமாக பிரேக் போட்டு பஸ்சை நிறுத்திய கண்டக்டரை பயணிகள் பாராட்டினர்.

Tags:    

Similar News