உண்மை எது

இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் நிலச்சரிவு வீடியோக்கள் உண்மையா?

Published On 2023-07-11 06:54 GMT   |   Update On 2023-07-11 06:54 GMT
  • பருவழை காரணமாக வடஇந்தியாவில் கனமழை
  • இமாச்சல பிரதேசம், உத்தரகாண்டில் நிலச்சரிவு எற்பட்டு சேதம்

இடைவிடாத கனமழையால் இமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை, மாநிலங்கள் முழுவதும் குறைந்தது 19 பேர் இயற்கையின் சீற்றத்திற்கு பலியாகியுள்ளனர்.

எல்லா நேரங்களிலும், வட இந்திய மாநிலங்களில் இயற்கையின் சீற்றம் குறித்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இதில் 2 நிலச்சரிவு குறித்த வீடியோக்கள் தவறானவை என தெரிய வந்துள்ளது.

"இமாச்சல பிரதேசம் மணாலியில் பேரழிவு போன்ற நிலச்சரிவு" என்ற வார்த்தைகளுடன் பகிரப்பட்ட முதல் வீடியோ, மலைப்பாதையில் ராட்சத பாறைகள் கீழே விழுவதைக் காட்டியது.

ஆனால் இது ஜூலை 28, 2019 அன்று பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோ என்பது ஆய்வில் தெளிவாகியிருக்கிறது.

அதேபோல், இரண்டாவது வீடியோவும் பாறைகள் மலையிலிருந்து கீழே விழுவதைக் காட்டியது. பாறைகள் இடிந்து விழுந்ததில் மக்கள் உயிருக்கு பயந்து ஓடுவதையும் காண முடிந்தது. இந்த சம்பவம் உத்தரகாண்டில் நடைபெற்றது போல் பதிவிடப்பட்டிருந்தது.

ஆனால் இது ஏப்ரல் 2, 2023 அன்று வெளியான ஒரு பழைய நிகழ்வு குறித்த வீடியோ என தெளிவாகியுள்ளது.

எனவே, இந்த இரு வீடியோக்களிலும் இமாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவை குறித்த எந்த தகவலும் இல்லை.

ஏற்கனவே, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முன்னதாக ஏற்பட்ட நிலச்சரிவு குறித்த வீடியோக்களாகும் எனத் தெரியவந்துள்ளது.

Similar News