செய்திகள்
காங்கிரஸ்

பெட்ரோல்-டீசல் விலையை குறைக்ககோரி அரியலூரில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி

Published On 2021-11-26 17:18 IST   |   Update On 2021-11-26 17:18:00 IST
அரியலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ஈடுபட்டனர்.

அரியலூர்:

அரியலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில், மாநிலத் துணைத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில், காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

பின்னர் பேரணியாக அண்ணாசிலை, தேரடி, கடைத்தெரு, சத்திரம், மாதா கோவில் வழியாக பேரணி ஒற்றுமைதிடலில் முடிவுற்றது.

பேரணியில் நகர காங்கிரஸ் தலைவர் சந்திர சேகர், மாவட்ட பொருளாளர் மனோகர், சிவகுமார், மாவட்ட துணைத்தலைவர் ராகவன், பழனிச்சாமி, தியாகராஜன், மகளிர் அணி சகுந்தலா, நகர பொறுப்பாளர் ஆண்டனி, செந்தில், சேவா தளம் சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News