செய்திகள்
அருப்புக்கோட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
அருப்புக்கோட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை புளியம்பட்டி-விருதுநகர் செல்லும் சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடப்பதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அழுகிய நிலையில் கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அருப்புக்கோட்டை தெற்குத்தெருவை சேர்ந்த தொழிலாளியான ரமேஷ் (வயது46) என்பது தெரியவந்தது. இவருடைய மனைவி மாலா. இவர் கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருவதாகவும், இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்குமிடையே ஏற்பட்ட பிரச்சினையால் ரமேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.