செய்திகள்
படிப்படியாக பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மேலும் 82 பேருக்கு கொரோனா
அரசு ஆஸ்பத்திரிகளில் 1,528 படுக்கையில் உள்ள நிலையில் 248 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர், 1,280 படுக்கைகள் காலியாக உள்ளன.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மேலும் 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 44,133 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 42,233 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 88 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 780 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.
அரசு ஆஸ்பத்திரிகளில் 1,528 படுக்கையில் உள்ள நிலையில் 248 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர், 1,280 படுக்கைகள் காலியாக உள்ளன. சிகிச்சை மையங்களில் 1,740 படுக்கைகள் உள்ள நிலையில் 75 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் 1,765 படுக்கைகள் காலியாக உள்ளன. நேற்று மாவட்டத்தில் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது விருதுநகர் ஆமத்தூர் பாண்டியன் நகர் என்.ஜி.ஓ. காலனி, வெள்ளூர், தாதம்பட்டி, சூலக்கரை, முத்துராமன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் பாலையம்பட்டி, மீனாட்சிபுரம், கஞ்சநாயக்கன்பட்டி, வீரசோழன், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருத்தங்கல், சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட பட்டியலில் 22 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில பட்டியலில் 82 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு 2 சதவீதமாக இருந்தது.
விருதுநகர் மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மேலும் 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 44,133 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 42,233 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 88 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 780 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.
அரசு ஆஸ்பத்திரிகளில் 1,528 படுக்கையில் உள்ள நிலையில் 248 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர், 1,280 படுக்கைகள் காலியாக உள்ளன. சிகிச்சை மையங்களில் 1,740 படுக்கைகள் உள்ள நிலையில் 75 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் 1,765 படுக்கைகள் காலியாக உள்ளன. நேற்று மாவட்டத்தில் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது விருதுநகர் ஆமத்தூர் பாண்டியன் நகர் என்.ஜி.ஓ. காலனி, வெள்ளூர், தாதம்பட்டி, சூலக்கரை, முத்துராமன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் பாலையம்பட்டி, மீனாட்சிபுரம், கஞ்சநாயக்கன்பட்டி, வீரசோழன், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருத்தங்கல், சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட பட்டியலில் 22 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில பட்டியலில் 82 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு 2 சதவீதமாக இருந்தது.