செய்திகள்
சாத்தூர் அருகே கிணற்றில் குளித்த மாணவன் பலி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கிணற்றில் குளிக்க சென்ற 6-ம் வகுப்பு மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான்.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒ.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த குருசாமி மகன் பிரவீன்குமார் (வயது11). 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
இவன் அங்குள்ள கிணற்றில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி இறந்தான்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சாத்தூர் தாலுகா போலீசார் விரைந்து வந்து பிரவீன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.