செய்திகள்
கொலை

சாத்தூர் அருகே குடும்ப தகராறில் மாமியாரை குத்தி கொன்ற மருமகன்

Published On 2021-06-23 06:58 GMT   |   Update On 2021-06-23 06:58 GMT
சாத்தூர் அருகே குடும்ப தகராறில் மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.

சாத்தூர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் சந்திரா. இவரது மகள் முனீஸ்வரி (வயது26). இவரும், தாயில் பட்டியைச் சேர்ந்த ராம்குமார் (29) என்பவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர்.

இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் முனீஸ்வரி கணவரை பிரிந்து சாத்தூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று இரவு மனைவியை பார்க்க ராம்குமார் வந்தார். அவர் முனீஸ்வரியை வீட்டுக்கு வருமாறு கூறி உள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த ராம்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முனீஸ்வரியை குத்தினார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த சந்திரா, அவரது தங்கை மாரியம்மாள் என்ற ஆயிரம் மாரியம்மாள் (55) ஆகியோர் ஓடி வந்து தடுக்க முயன்றனர்.

இதில் அவர்களுக்கும் கத்திக்குத்து விழுந்தது. 3 பேரையும் கத்தியால் குத்தி விட்டு ராம்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த மாரியம்மாள் என்ற ஆயிரம் மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார். முனீஸ்வரி, சந்திரா ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சாத்தூர் அருகே உள்ள படர்ந்தால் கிராமத்தில் கணவர் வைரமுத்துவுடன் வசித்து வந்த மாரியம்மாள் என்ற ஆயிரம் மாரியம்மாள் சகோதரியை பார்ப்பதற்காக வந்த இடத்தில்தான் கத்திக் குத்தில் பலியாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி, சப்- இன்ஸ்பெக்டர் சசிக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி தப்பி ஓடிய ராம்குமாரை கைது செய்தனர்.

Tags:    

Similar News