செய்திகள்
ரங்கசாமி

புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து- முதலமைச்சர் அறிவிப்பு

Published On 2021-06-07 08:53 GMT   |   Update On 2021-06-07 08:53 GMT
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் புதுச்சேரியிலும் ரத்து செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து மாநில பாடத்திட்டங்களின் கீழ் படிக்கும் மாணவர்களின் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதா, நடத்துவதா என்பது குறித்து பல்வேறு மாநிலங்களும் ஆலோசித்து முடிவுகளை அறிவித்துவருகின்றன.

உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளன.


இதையடுத்து தமிழகத்திலும் பிளஸ்2  பொதுத்தேர்வு ரத்து செய்து கடந்த சனிக்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.



இந்நிலையில் புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து முதலமைச்சர் ரங்கசாமி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News