செய்திகள்
கோப்புப்படம்

புதுச்சேரியில் மேலும் 712 பேருக்கு தொற்று பாதிப்பு - இதுவரை கொரோனாவுக்கு 1,600 பேர் பலி

Published On 2021-06-05 23:32 IST   |   Update On 2021-06-05 23:32:00 IST
புதுவையில் 9, 458 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 712 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 826 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 458 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 712 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 826 ஆக உயர்ந்துள்ளது. 1,215 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆஸ்பத்திரிகளில் 1,368 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 8 ஆயிரத்து 126 பேரும் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 18 பேர் பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,601 ஆக உயர்ந்துள்ளது.

அதாவது தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் தமிழ்த்தாய் நகரை சேர்ந்த 65 வயது மூதாட்டி, திருக்கனூரை சேர்ந்த 30 வயது பெண், வேல்ராம்பட்டை சேர்ந்த 59 வயது ஆண், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுல்தான்பேட்டையை சேர்ந்த 49 வயது பெண், பங்கூரைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி, லாஸ்பேட்டையை சேர்ந்த 71 வயது மூதாட்டி, நேதாஜி நகரை சேர்ந்த 65 வயது முதியவர், அம்பேத்கர் சாலையை சேர்ந்த 42 வயது ஆண், மூலக்குளத்தை சேர்ந்த 72 வயது முதியவர், உடையார்பாளையத்தை சேர்ந்த 85 வயது முதியவர், சோலை நகரை சேர்ந்த 71 வயது மூதாட்டி ஆகியோர் பலியாகி உள்ளனர்.

ஜிப்மரில் கொம்பாக்கத்தை சேர்ந்த 64 வயது முதியவர், அன்னை தெரசா நகரை சேர்ந்த 37 வயது பெண், வில்லியனூர் மணவெளியை சேர்ந்த 40 வயது பெண், பிள்ளை மேஸ்திரி வீதியை சேர்ந்த 57 வயது ஆண், ஏனாமில் 66 வயது மூதாட்டி, காரைக்காலில் வண்டிக்கார வீதியைச் சேர்ந்த 68 வயது முதியவர், டி.கே.நகரை சேர்ந்த 45 வயது ஆண் ஆகியோர் இறந்துள்ளனர்.

புதுவையில் உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும் குணமடைவது 89.71 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 90 பேரும், முன்கள பணியாளர்கள் 91 பேரும், பொதுமக்கள் 3 ஆயிரத்து 13 பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர். இதுவரை 2 லட்சத்து 76 ஆயிரத்து 442 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Similar News