செய்திகள்
செவிலியர் சசிபிரபா

கொரோனா பாதிப்பு- புதுச்சேரியில் மேலும் ஒரு செவிலியர் பலி

Published On 2021-05-31 11:01 IST   |   Update On 2021-05-31 11:01:00 IST
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் பத்துக்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரி:

கொரோனாவை கட்டுப்படுத்த மற்ற மாநிலங்களில் முழுமையான ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்போது புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் பத்துக்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் ஒரு செவிலியர் உயிரிழந்துள்ளார்.



கோரிமேடு பகுதியை சேர்ந்த 45 வயதான சசிபிரபா என்ற செவிலியர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இவர் ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.


Similar News