செய்திகள்
கைது

மயிலாடுதுறை அருகே ஊராட்சி தலைவர் வீட்டில் கிளப் நடத்தி சூதாடிய 6 பேர் கைது

Published On 2021-04-21 09:36 GMT   |   Update On 2021-04-21 09:36 GMT
மயிலாடுதுறை அருகே கருவாழக்கரை கிராமத்தில் சூதாட்ட கிளப் நடத்தி வருவதாக செம்பனார்கோவில் சப்-இன்ஸ்பெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை அருகே கருவாழக்கரை கிராமத்தில் சூதாட்ட கிளப் நடத்தி வருவதாக செம்பனார்கோவில் சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்ற போது கருவாழக்கரை மருவத்தூரை சேர்ந்த பழனிவேல் (இவர் கருவாழக்கரை ஊராட்சி தலைவர்) தனது வீட்டு மாடியில் சூதாட்ட கிளப் நடந்தி வருவது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட கருவாழக்கரை சக்திவேல், ராஜ்குமார், பழனி, பரசலூர் தங்க மாரியப்பன், பேரளம் இக்பால், கடிச்சம்பாடி ராதா ஆகிய 6 பேரை சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

Tags:    

Similar News