செய்திகள்
சீர்காழியில் கனமழை- நெல்மூட்டைகள் நனையும் அபாயத்தால் விவசாயிகள் கவலை
சீர்காழி பகுதியில் உள்ள அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்மூட்டைகள் மழையில் நனைந்து பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடந்த 3 நாட்களாக வெயில் இன்றி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 5 மணியளவில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக மாறி 2 மணி நேரத்துக்கு மேல் பெய்தது. காற்று அதிகமாக வீசியதால் மின்சாரம் தடைபட்டது.
இந்த பலத்த மழையால் சீர்காழி நகரின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இந்த மழை நிம்மதியை கொடுத்தது.
சீர்காழி பகுதியில் உள்ள அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்மூட்டைகள் எடுக்கப்படாமல் வெயிலில் காய்ந்து வந்த நிலையில் இந்த மழையால் தற்போது மழையிலும் நனைந்து பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடந்த 3 நாட்களாக வெயில் இன்றி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 5 மணியளவில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக மாறி 2 மணி நேரத்துக்கு மேல் பெய்தது. காற்று அதிகமாக வீசியதால் மின்சாரம் தடைபட்டது.
இந்த பலத்த மழையால் சீர்காழி நகரின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இந்த மழை நிம்மதியை கொடுத்தது.
சீர்காழி பகுதியில் உள்ள அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்மூட்டைகள் எடுக்கப்படாமல் வெயிலில் காய்ந்து வந்த நிலையில் இந்த மழையால் தற்போது மழையிலும் நனைந்து பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.