செய்திகள்
விபத்து

மீன்சுருட்டி அருகே டிராக்டர் டிப்பரில் சிக்கிய சிறுவன் படுகாயம்

Published On 2021-04-01 10:39 GMT   |   Update On 2021-04-01 10:39 GMT
ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டில் இருந்து கொல்லாபுரம் நோக்கி டிராக்டர் வந்தபோது நிலைதடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் இறங்கியதில் சிறுவன் டிராக்டர் டிப்பர் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தான்.
மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கொல்லாபுரம் காலனி தெருவை சேர்ந்தவர் ரஜினி மகன் சம்பத்குமார் (வயது 20). இவர் தனது புதிய டிராக்டரை ஓட்டிக்கொண்டு வந்த போது, அதே கிராமத்தை சேர்ந்த நவபாலன் மகன் சத்தியபாலன் (வயது 15) என்ற சிறுவன் அதில் வந்ததாக தெரிகிறது.

ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டில் இருந்து கொல்லாபுரம் நோக்கி டிராக்டர் வந்தபோது நிலைதடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் இறங்கியதில் சத்தியபாலன் டிராக்டர் டிப்பர் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தான். அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.

இதுகுறித்து சத்தியபாலனின் தாய் ரேகா கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து சம்பத்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News