செய்திகள்
கோப்பு படம்.

அரியலூரில் 7 பேருக்கு கொரோனா- பெரம்பலூரில் 2-வது நாளாக பாதிப்பு இல்லை

Published On 2021-03-27 15:54 IST   |   Update On 2021-03-27 15:54:00 IST
அரியலூர் மாவட்டத்தில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் 7 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர்:

அரியலூர் மாவட்டத்தில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் 7 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 800 ஆக உயர்ந்துள்ளது. 

இதில் ஏற்கனவே 49 பேர் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரத்து 715 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 36 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று யாரும் புதிதாக கொரோனவினால் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே 6 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News