செய்திகள்
கொரோனா வைரஸ்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 43 பேர் பாதிப்பு

Published On 2021-01-05 15:32 IST   |   Update On 2021-01-05 15:32:00 IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 43 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 43 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்து 260 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 49 ஆயிரத்து 34 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 746 உயர்ந்தது. 480 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 27 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 818 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 28 ஆயிரத்து 124 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 434 பேர் உயிரிழந்துள்ளனர். 260 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News