செய்திகள்
தற்கொலை

அனகாபுத்தூரில் ஐடிஐ மாணவர் தற்கொலை

Published On 2021-01-04 07:42 IST   |   Update On 2021-01-04 07:42:00 IST
அனகாபுத்தூரில் ஐடிஐ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், விசுவாசபுரம் பாத்திமா நகரைச் சேர்ந்தவர் இக்னியஸ்சுந்தர். கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி முத்துலெட்சுமியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுடைய மகன் சேவியர்பிரகாஷ் அஜய் (வயது 18) தந்தையுடன் வசித்து வந்தார்.

சென்னையில் உள்ள தொழிற்பயிற்சி பள்ளியில் ஐ.டி.ஐ. முதலாமாண்டு படித்து வந்த அஜய், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக ஐ.டி.ஐ. திறக்காததால், அதே பகுதியில் கட்டிட வேலை செய்து வந்தார். சமீப காலமாக அஜய், தனது தாயிடம் போனில் பேசி வந்தார்.

இதனை அவரது தந்தை கண்டித்து வந்தார். இதில் மனம் உடைந்த அஜய், நேற்று வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News