செய்திகள்
மதுராந்தகம் ஏரி

மதுராந்தகம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு- மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

Published On 2020-11-27 09:02 GMT   |   Update On 2020-11-27 09:02 GMT
மதுராந்தகம் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்படும் நிலையில் ஏரியை சுற்றியுள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:

மதுராந்தகம் ஏரிக்கு வரும் மழைநீர் உபரிநீராக கலிங்கல் மூலம் கிளியாற்றில் வெளியேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கத்திலிச்சேரி, விழுதமங்கலம், வளர்பிறை, முள்ளி, முன்னுத்திக்குப்பம், நீலமங்கலம், முருக்கஞ்சேரி, குன்னத்தூர், கருங்குழி, இருசமநல்லூர், பூதூர், ஈசூர் கிராம மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்படும் நிலையில்  ஏரியை சுற்றியுள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்மழையால் மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் பொதுப்பணித்துறை வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags:    

Similar News