செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
காரைக்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி:
சாக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 5-ம் வகுப்பு படிக்கும் சரளமாக பேச இயலாத 10 வயது சிறுமி பக்கத்து வீட்டிற்கு விளையாட சென்றாள்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான அழகர் (வயது 38) என்பவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி அனைத்து மகளிர் நிலைய போலீசார் அழகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அழகர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.