செய்திகள்
தற்கொலை

திருபுவனை அருகே தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் தற்கொலை

Published On 2020-11-19 08:53 GMT   |   Update On 2020-11-19 08:53 GMT
கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருபுவனை:

திருபுவனையை அடுத்த நல்லூர் பேட் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருள்மணி (வயது 47). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி வீரம்மாள் (வயது 41). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்தார். இந்தநிலையில் அருள்மணி அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் அவரை மனைவி வீரம்மாள் கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினமும் அருள்மணி மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பல முறை கண்டித்தும் கணவர் திருந்தாததால் மனமுடைந்த வீரம்மாள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கியபின் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து அருள்மணி திருபுவனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜய் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கணவரின் குடிப்பழக்கத்தால் மனைவியின் விபரீத முடிவு குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News