செய்திகள்
விபத்து பலி

ஆட்டோ கவிழ்ந்து விபத்து: டிரைவர் பலி

Published On 2020-10-19 09:18 GMT   |   Update On 2020-10-19 09:18 GMT
ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:

விருதுநகர் பாத்திமாநகரை சேர்ந்தவர் பாண்டி (வயது35). இவர் தனக்கு சொந்தமான ஆட்டோவை ஓட்டி வந்தார். கடந்த 11-ந் தேதி இவர், தனது நண்பர்களான ஆரோக்கியராஜ், பனிமயராஜ் ஆகியோருடன் ஆட்டோவில் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ திடீரென கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவை ஓட்டி வந்த பாண்டி படுகாயம் அடைந்தார். பின்னர் தீவிர சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாண்டியின் தந்தை பரமசிவம் (57) அளித்த புகாரின் பேரில் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News