செய்திகள்
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண்

புதுவையில் மேலும் 26 கட்டுப்பாட்டு மண்டலம்

Published On 2020-07-12 06:54 GMT   |   Update On 2020-07-12 06:54 GMT
புதுவையில் மேலும் 26 இடங்களை கட்டுப்பாட்டு மண்டலமாக மாவட்ட கலெக்டர் அருண் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் வசித்து வந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி 1.சாரம் வெங்கட்டா நகர் சன்னதி வீதி வழு அப்பார்ட்மென்ட், 2.பழைய சாரம் வடக்கு வீதி, 3.காலாப்பட்டு கனகசெட்டிக்குளம் மாமர் வீதி, 4.சண்முகாபுரம் சுப்ரமணியர் கோவில் வீதி, 5.கருவடிக்குப்பம் மேஜர் சரவணன் நகர் 4-வது குறுக்குத்தெரு, 6.பெத்துச்செட்டிப்பேட்டை விநாயகர் கோவில் வீதி, 7.சாரம் வெங்கடேஸ்வரா நகர் சேரன் வீதி, 8.ரெட்டியார்பாளையம் கவுண்டன்பாளையம் சுப்பையா வீதி, 9.சாரம் கிழக்கு ரெயின்போ நகர் 7-வது குறுக்குத்தெரு, 10.சாரம் ரெயின்போ நகர் 3-வது குறுக்குத்தெரு,

11.சாரம் கவிக்குயில் நகர் 3-வது குறுக்குத்தெரு, 12.ரெட்டியார்பாளையம் ஜான்சிநகர் சுவர்ணாலயம் அபார்ட்மென்ட்ஸ், 13.பாக்கமுடையான்பேட்டை பேசின் நகர் கோகுலம் அப்பார்ட்மென்ட்ஸ், 14.லாஸ்பேட்டை அசோக் நகர், செண்பகராமன் வீதி, 15.வடமங்கலம் புதுநகர், 16. ஒதியம்பட்டு புதுப்பேட்டை மாரியம்மன் கோவில் வீதி, 17. வி.மணவெளி திருவேணி நகர்-விரிவு 2-வது குறுக்குத்தெரு, 18. கூடப்பாக்கம் பெருமாள் கோவில் வீதி, 19.சுல்தான்பேட்டை ஜாகீர்உசேன் நகர் முதல் குறுக்குத்தெரு, 20.சுல்தான்பேட்டை கால்வாய் வீதி பாத்திமா அப்பார்ட்மென்ட், 21. அரும்பார்த்தபுரம் திருக்குறளார் நகர் சேக்கிழார் வீதி, 22. திருக்கனூர் காந்தி நகர், 23.வி.மணவெளி நமச்சிவாயம் நகர், 24.வி.மணவெளி புதிய கிணறு வீதி, 25.பொறையூர்பேட் புதுநகர், 26.பொறையூர்பேட் புதுநகர் களத்துமேடு உள்ளிட்ட பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News