செய்திகள்
புதுவை கடற்கரை சாலை திறப்பு- பொதுமக்கள் மகிழ்ச்சி
புதுவை கடற்கரை சாலை திறக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பதை நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கண்காணித்து வந்தனர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் கடற்கரை சாலை கடந்த மார்ச் மாதம் முதல் முழுமையாக மூடப்பட்டது. கடந்த மாதம் மீண்டும் திறக்கப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து மீண்டும் கடற்கரை சாலை மூடப்பட்டது.
இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடற்கரை சாலை நேற்று முதல் நடைபயிற்சிக்கு மட்டும் காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை திறந்து வைக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் நள்ளிரவு வெளியிடப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை மழை பெய்ததாலும் குறைந்த எண்ணிக்கையிலேயே மக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பதை பின்பற்றுகிறார்களா? என்று நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கண்காணித்து வந்தனர்.
புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் கடற்கரை சாலை கடந்த மார்ச் மாதம் முதல் முழுமையாக மூடப்பட்டது. கடந்த மாதம் மீண்டும் திறக்கப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து மீண்டும் கடற்கரை சாலை மூடப்பட்டது.
இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடற்கரை சாலை நேற்று முதல் நடைபயிற்சிக்கு மட்டும் காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை திறந்து வைக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் நள்ளிரவு வெளியிடப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை மழை பெய்ததாலும் குறைந்த எண்ணிக்கையிலேயே மக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பதை பின்பற்றுகிறார்களா? என்று நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கண்காணித்து வந்தனர்.