செய்திகள்
புதுச்சேரி

புதுவையில் 5 வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயங்க தொடங்கியது

Published On 2020-05-20 13:46 IST   |   Update On 2020-05-20 13:46:00 IST
புதுவையில் 5 வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயங்க தொடங்கியது. பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சீட்டுக்கு ஒருவர் என்ற முறையில் அமர வைக்கப்பட்டனர்.
புதுச்சேரி:

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் புதுவையில் பஸ்கள் இயங்கவில்லை.

ஊரடங்கின் 4-வது கட்டத்தில் மத்திய அரசு பல தளர்வுகளை அறிவித்தது. இதனையடுத்து உள்ளூர் நகர பஸ்களை மட்டும் நேற்று முதல் இயக்க அரசு முடிவெடுத்தது. ஆனால், சரியான ஏற்பாடுகள் செய்யப்படாததால் நேற்று பஸ்கள் ஓடவில்லை. இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) முதல் அரசு பஸ்களை 5 வழித்தடத்தில் மட்டும் இயக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை 7 மணி முதல் புதுவை-கோரிமேடு, ரெயில் நிலையம்-கோரிமேடு, புதுவை-நல்லவாடு, புதுவை- தவளக்குப்பம், டி.என்.பாளையம்- வில்லியனூர், புதுவை- முருங்கப்பாக்கம், வில்லியனூர்- பத்துக்கண்ணு ஆகிய 5 வழித்தடத்தில் அரசு பஸ்கள் இயங்க தொடங்கியது.

புதிய பஸ் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் இருந்து பஸ்கள் புறப்பட்டு சென்றது. ஒவ்வொரு முறை பஸ்களை இயக்கும்போது, கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

மேலும் பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சீட்டுக்கு ஒருவர் என்ற முறையில் அமர வைக்கப்பட்டனர். இரவு 7 மணி வரை மட்டுமே பஸ்கள் இயங்கும். பஸ் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

புதுவையில் இருந்து காரைக்காலுக்கு நாளை (வியாழக்கிழமை) முதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த பஸ்கள் கடலூர், நாகை மாவட்டங்கள் வழியாக செல்ல வேண்டும் என்பதால் இரு மாவட்ட கலெக்டர்களின் அனுமதி கேட்கப்பட்டது. அவர்கள் அனுமதி அளித்துள்ளனர். இந்த பஸ்களில் ஏறும் பயணிகள் நேரடியாக காரைக்காலுக்கு மட்டுமே செல்ல முடியும்.

நாளை காலை 6 மணிக்கு புதுவையில் இருந்து புறப்படும் பஸ் காலை 9 மணிக்கு காரைக்கால் சென்றடையும். பின்னர் அங்கிருந்து 12 மணிக்கு புறப்படும் பஸ் மாலை 4 மணிக்கு புதுவை வந்தடையும். பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Similar News