செய்திகள்
கொரோனா வைரஸ்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு கொரோனா உறுதி

Published On 2020-05-12 12:42 IST   |   Update On 2020-05-12 12:42:00 IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 2,051 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
 
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4,371 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று தொற்று உறுதியான 32 பேரில் 25 பேர் கோயம்பேடு தொடர்புடையவர்கள் ஆவர். இதனால் அம்மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 388ஆக உயர்ந்துள்ளது.

மேலும் மாவட்டத்தில் மொத்தம் பாதிக்கப்பட்ட 388 பேரில் 150 பேர் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News