செய்திகள்
தற்கொலை

தட்டாஞ்சாவடியில் எலி மருந்து தின்று தொழிலாளி தற்கொலை

Published On 2020-03-20 10:01 GMT   |   Update On 2020-03-20 10:01 GMT
புதுவை தட்டாஞ்சாவடியில் தொழிலாளி எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:

புதுவை தட்டாஞ்சாவடி ஞானதியாகு நகரை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கு அஞ்சுகம் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

கன்னியப்பனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. மேலும் கடந்த சில நாட்களாக அவர் வேலை இல்லாமல் மனவிரக்தியுடன் இருந்து வந்தார்.

இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த கன்னியப்பன் வீட்டில் இருந்த எலிமருந்தை (வி‌ஷம்) தின்று மயங்கி விழுந்தார்.

உடனடியாக கன்னியப்பனை அவரது குடும்பத்தினர் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை கன்னியப்பன் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News