செய்திகள்
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பள்ளி ஆசிரியை தற்கொலை
புதுவையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பள்ளி ஆசிரியை தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை காமராஜர் சாலை சாரதிநகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவர் காமராஜர் சாலையில் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் லட்சுமி (வயது23). இவர் புதுவையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து திருமண நிச்சயம் செய்தனர். வருகிற 27-ந்தேதி திருமணம் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்து வந்தனர். ஆனால் லட்சுமிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை லட்சுமி வீட்டின் கழிவறைக்கு சென்றார். வெகுநேரமாக திரும்பிவரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் கழிப்பறையின் கதவை உடைத்து பார்த்த போது லட்சுமி இரும்பு கம்பியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் லட்சுமியை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து திருமணத்துக்கு விருப்பம் இல்லாததால் லட்சுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை காமராஜர் சாலை சாரதிநகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவர் காமராஜர் சாலையில் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் லட்சுமி (வயது23). இவர் புதுவையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து திருமண நிச்சயம் செய்தனர். வருகிற 27-ந்தேதி திருமணம் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்து வந்தனர். ஆனால் லட்சுமிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை லட்சுமி வீட்டின் கழிவறைக்கு சென்றார். வெகுநேரமாக திரும்பிவரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் கழிப்பறையின் கதவை உடைத்து பார்த்த போது லட்சுமி இரும்பு கம்பியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் லட்சுமியை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து திருமணத்துக்கு விருப்பம் இல்லாததால் லட்சுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.