செய்திகள்
தற்கொலை

வில்லியனூர் அருகே எலி மருந்து தின்று வாலிபர் தற்கொலை

Published On 2020-03-16 12:26 GMT   |   Update On 2020-03-16 12:26 GMT
வில்லியனூர் அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த வாலிபர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

வில்லியனூர் அருகே உள்ள உறுவையார் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மூத்த மகன் பாலாஜி (வயது 25). வெல்டிங் தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

சம்பவத்தன்று நோய் கொடுமை அதிகமானதால் மனமுடைந்த பாலாஜி திடீரென வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலாஜி எலி மருந்தை தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். 

இதனையறிந்த அவரது தம்பி ராம்குமார்(22) அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை பாலாஜி பரிதாபமாக இறந்து போனார். பின்னர் இது குறித்து ராம்குமார் மங்கலம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ் பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Tags:    

Similar News