தோஷ பரிகாரங்கள்
null

பிறவிப் பிணி தீர்க்கும் கோ பூஜை... வழிபட்டால் தீரும் பிரச்சனைகள்

Published On 2023-01-16 01:23 GMT   |   Update On 2023-01-16 01:28 GMT
  • பிறவிப் பிணி தீர்க்கும் கோ பூஜை... வழிபட்டால் தீரும் பிரச்சனைகள்
  • ஜாதகத்தில் உள்ள அனைத்து விதமான தோஷங்களும் விலகும்.

மாட்டுப்பொங்கல்/திருவள்ளுவர் தினம் 16.1.2023, தை 2 , (திங்கட்கிழமை)

இந்து சமயத்தில் பசுவை வணங்குவதைப்பெரும் புண்ணியமாக கருதுகின்றனர். இந்தப் பசுவை கோமாதா என்றும் பெருமையுடன் அழைக்கின்றனர்.

பசுவின் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வங்களும், புனிதத்திற்குரியவர்களும் இருப்பதாக கருதுகின்றனர்.

இப்பசுக்களில் மும்மூர்த்திகள் மட்டுமல்ல சத்தியம், தர்மம் என்று எல்லா தேவதைகளும் வசிக்கின்றனர். மாட்டுப்பொங்கல் அன்று கோமாதா எனப்படும் பசுவை பூஜை செய்து வழிபட்டால் பிறவிப் பிணி தீரும். ஜாதகத்தில் உள்ள அனைத்து விதமான தோஷங்களும் விலகும்.

கடும் உழைப்புக்கும் உழவுக்குத் துணை செய்த கால்நடைகளை ஆராதிக்கும் நாள். உழவுக்கு உதவிய கால் நடைகளுக்கும் பால் தரும் பசுக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் தான் மாட்டுப்பொங்கல். திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கால்நடைகளை சுத்தப்படுத்தி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி மாலைகள் அணிவித்து அலங்கரிக்க வேண்டும்.

மாட்டுக் கொட்டகை சுத்தம் செய்து சர்க்கரை பொங்கல் படைத்து கோ பூஜை செய்வது சிறப்பு.மாடுகளை வணங்கி விட்டு வாழை இலையில் பொங்கல் வைத்து அவற்றிற்கு உண்ண கொடுக்க வேண்டும்.  தமிழக கிராமங்களில் உறவினர்கள் மேல்  மஞ்சள் நீர் தெளிப்பது , ஜல்லிக்கட்டு என்னும் மாடுபிடி விளையாட்டு இந்நாளில் நடைபெறும். இந்த நாளில் பசுவை பூஜித்தால் சகல தேவதைகளையும் பூஜித்த பலன் கிட்டும். 

கோ பூஜை செய்தால் கோடி நன்மை பெறலாம் என்பது நமது முன்னோர் வாக்கு.தினமும் கோபூஜை செய்வது சிறப்பு. தினமும் செய்ய முடியாதவர்கள் வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டும். அதுவும் முடியாதவர்கள்.சகல ஐஸ்வர்யத்தையும் அள்ளித்தரும் கோ பூஜையை வருடம் ஒருமுறையாவது மாட்டுப்பொங்கல் அன்று செய்து வரவேண்டும்.  

வருடத்திற்கு ஒருமுறையாவது பசுவை வீட்டிற்கு அழைத்து அதற்கு மஞ்சள்,குங்குமம் வைத்து, மலர்களால் அலங்காரம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து  பழங்கள், அகத்திகீரை போன்றவற்றை தானியங்கள் சாப்பிட கொடுத்து, நெய் விளக்கு ஏற்றி, தீபஆராதனை செய்ய வேண்டும்.பிறகு நெய் விளக்கை கையில் எடுத்து அந்த பசுவை சுற்றி மூன்று முறை வலம் வர வேண்டும். இப்படி வருடத்திற்கு ஒருமுறையாவது கோபூஜை செய்து வந்தால், நம் இஷ்ட தெய்வ குல தெய்வ அருளாசியும் கிடைத்து, தலைமுறை தலைமுறைக்கு சுபிட்சம் கிடைக்கும்.உயர் ஜாதி பசுவை கன்றுடன் ஸ்ரீசுக்தம் சொல்லி கோபூஜை செய்து, தானம் செய்தால் கோர்ட் விவகாரங்கள், வழக்குகளில் வெற்றி ஏற்படும்.விரோதம் நீங்கும்.

பிதுர் சாபம், ரிஷிகள் சாபம், மூதாதையர் சாபம் ஆகியவை நீங்குகிறது. செல்வவளம் தரும் திருமகள் இதன் பிருஷ்டபாகத்தில்(பின்பாகம்) வசிக்கிறாள். இப்பகுதியைதொட்டு வழிபட்டால் முன் ஜென்ம பாவங்கள் விலகும். இந்திர பூஜையை விட கோ பூஜையே மேலானது என்று ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லி இருக்கிறார்.

Tags:    

Similar News