தோஷ பரிகாரங்கள்

இன்று சகல தோஷங்களையும் போக்கும் ஸ்ரீபுவனேஸ்வரி, குருபகவான் ஜெயந்தி

Published On 2022-09-07 05:47 GMT   |   Update On 2022-09-07 05:47 GMT
  • ஜாதகத்தின் சகல தோஷங்களையும் குரு பார்வை நீக்கி விடும்.
  • இன்று புவனேஸ்வரி அம்மன் அவதரித்த நாள்.

இன்று குருபகவான் ஜெயந்தி. குரு பகவான் நவகிரகங்களில் பூரண சுபராகக் கருதப்படுகிறார். ஜாதகத்தின் சகல தோஷங்களையும் குரு பார்வை நீக்கி விடும். "குரு பார்க்க கோடி புண்ணியம்" என்று ஜோதிடத்தில் சொல்வார்கள்.

குரு ஜெயந்தியான இன்று அருகாமையில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று இறைவனை வழிபட வேண்டும். குருவே தெய்வம் என்பதால் பகவானை குருவாக நினைத்து வழிபட வேண்டும்.

புவனம் என்றால் உலகம். உலகங்களுக்கெல்லாம் ஈஸ்வரியாக (தலைவியாக) இருந்து கொண்டு அனைத்து உலகங்களையும் ஆள்வதால் அம்பாள் புவனேஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். தச மகாவித்யையில் 4-வதாக காட்சி தரும் புவனேஸ்வரி அம்மன் அவதரித்த நாளான இன்று (புதன்கிழமை) நாமும் புவனேஸ்வரி தேவியை பூஜை செய்து பாடல் பாடி மந்திரம் சொல்லி பலனை அடையலாம்.

Tags:    

Similar News