முன்னோட்டம்
பேட்லர்ஸ் சினிமா சார்பாக கருப்பையா முருகன் இயக்கி இருக்கும் ‘விடியாத இரவொன்று வேண்டும்’ படத்தின் முன்னோட்டம்.
பேட்லர்ஸ் சினிமா சார்பாக ‘யானை மேல் குதிரை சவாரி’ படத்தை தயாரித்து இயக்கிய கருப்பையா முருகன் தற்போது இயக்கி இருக்கும் படம் ‘விடியாத இரவொன்று வேண்டும்’. இப்படத்தில் ‘பிடிச்சிருக்கு’, ‘முருகா’, ‘கோழி கூவுது’ படங்களில் நடித்த அசோக் கதாநாயகனாக நடிக்க, ஹிரித்திகா ஸ்ரீனிவாஸ் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் முத்துராமன், ஈ.ராமதாஸ், சௌமியா, முத்துக்காளை, பிரபாகரன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றிப் பேசிய இயக்குனர் கருப்பையா முருகன், “எதிர்பாராத விபத்துக்கள் ஏற்படும்போது விபத்தில் சிக்கியவர்களை நாம் காப்பாற்றுகிறோமா அல்லது பிரச்சனைகள் வருமென்று ஒதுங்கி போகிறோமா என்பதை பற்றி திரில்லிங்காக சொல்லும் படம் இது. படம் முழுக்க ஒரே இரவில் நடப்பதால், இரவில் மட்டுமே சென்னை மற்றும் அரக்கோணம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது ” என்றார்.
இசை - வி.கோகுலகிருஷ்ணா, ஒளிப்பதிவு - வினோத் காந்தி, படத்தொகுப்பு - பிரீத்தி மோகன், இணை தயாரிப்பு - ஆர்.எஸ்.பிரேமலதா, ரேகா கணேஷ் ஆகியோர் பணியாற்றி இருக்கிறார்கள். ரிலீசுக்கு தயாரான இப்படத்துக்கு சென்சாரில் யூ சர்பிகேட் கிடைத்திருக்கிறது.