கிசுகிசு
திறப்பு விழாவிற்கு அதிக பணம் கேட்ட நடிகை
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை கடை திறப்பு விழாவிற்கு அதிக பணம் கேட்டிருக்கிறாராம்.
பல வெற்றி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகைக்கு, தற்போது திருமணத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் கிடைப்பது இல்லையாம். சின்ன சின்ன வேடங்கள் வருவதால் நடிகை அதில் நடிப்பதை மறுத்து வருகிறாராம். அதனால், சின்னத்திரை மற்றும் விளம்பர படங்களில் நடிகை கவனம் செலுத்தி வருகிறாராம்.
இந்நிலையில், நடிகையை ஒரு கடை திறப்பு விழாவிற்கு அழைத்தார்களாம். நடிகையோ பல ரூபாய் வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம். ஒரு மணி நேர விழாவிற்கு இவ்வளவு தொகையா என்று கடைக்காரர்கள் புலம்பிக் கொண்டே சென்றார்களாம்.