கிசுகிசு
சின்னத்திரையில் இருந்து தற்போது பெரிய திரையில் நடிக்க வந்திருக்கும் இளம் நடிகர் ஓவர் கெத்து காட்டி அடங்கி இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் ஒன்று இரண்டு காட்சிகளில் மட்டுமே நடித்த நடிகர் சின்னத்திரையில் வாய்ப்பு கிடைக்க சீரியலில் நடித்து வந்தாராம். அதன்பின் ஒரு ஷோவில் நடிகர் கலந்துக் கொள்ள மிகவும் பிரபலமாகி விட்டாராம்.
தற்போது நடிகருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்து விட்டதாம். மேனேஜர் உதவியாளர் இன்று நான்கைந்து பேரை வைத்துக் கொண்டு கெத்து காண்பித்து வந்த நடிகர், தற்போது அடங்கி போய் இருக்கிறாராம். நடிகர் பேசிய பேச்சும், அவரது நடிப்பில் வெளியான படமும்தான் இதற்கு காரணமாம்.