கிசுகிசு
பட வாய்ப்பு வந்தவுடன் கெத்து காட்டும் நடிகை
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை ஒருவர், பட வாய்ப்பு வந்தவுடன் ஓவர் கெத்து காண்பிக்கிறாராம்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை, தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருக்கிறாராம். இவர் கடந்த ஆண்டு ஒரு சில பிரச்சனைகளில் சிக்கி பட வாய்ப்புகளை இழந்தாராம். இதனால், எங்கேயும் பேசாமல் வாயை மூடி இருந்தாராம்.
தற்போது நடிகையை தேடி ஐந்து, ஆறு படங்கள் வந்திருக்கிறதாம். இதனால், ஓவர் கெத்து காட்ட ஆரம்பித்து இருக்கிறாராம். போகிற இடங்களில் எல்லாம் ஓவராக பேசி வருகிறாராம். நடிகையின் செயலை பார்த்தவர்கள் பலரும் பட வாய்ப்பு வந்தவுடன் கெத்தா... என்று பேசி வருகிறார்களாம்.