கிசுகிசு
நடிகரை நினைத்து புலம்பும் தயாரிப்பாளர்
தமிழ் சினிமாவில் சில படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஒருவர் நடிகரை நினைத்து புலம்பி வருகிறாராம்.
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து தற்போது பெரிய திரைக்கு வந்திருக்கும் இளம் நடிகர் ஒருவர், தன்னுடைய பட விழாவில் ஓவராக பேசி பலருடைய கண்டனத்தை பெற்றாராம். இவர் நடித்த படம் ஒருவழியாக திரைக்கு வந்ததாம். அந்த படத்தை பார்த்தவர்கள் கலவையான விமர்சனங்கள் வந்ததால் நடிகர் கவலையில் இருக்கிறாராம்.
இவரைவிட பெரிய கவலையில் தயாரிப்பாளர் இருக்கிறாராம். ஏனென்றால் நடிகரை நம்பி போட்ட பணம் எல்லாம் வீணாகி விட்டதாம். அவர் பேசிய வார்த்தைகள் படம் நஷ்டமடைய காரணம் என்று பலரிடம் தயாரிப்பாளர் புலம்பி வருகிறாராம்.