கிசுகிசு
கிசுகிசு

பட வாய்ப்பு இல்லாததால் நடிகையின் திடீர் முடிவு

Published On 2021-12-27 11:50 GMT   |   Update On 2021-12-27 11:50 GMT
கிராமத்து பின்னணி கொண்ட கதைகளில் நடித்து வந்த நடிகை, தற்போது பட வாய்ப்பு இல்லாததால் திடீர் முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் சங்க நடிகருடன் ரிப்பன் கட்டி வந்த நடிகைக்கு, தொடர்ந்து கிராமத்து பின்னணி கொண்ட கதைகள் தேடி வந்ததாம். நடிகையும் ஒப்புக்கொண்டு நடித்து வந்தாராம். தான் நடித்த படங்கள் எல்லாம் ஓரளவுக்கு வெற்றி பெற்றதால், திடீரென்று சம்பளத்தை உயர்த்தினாராம்.

நடிகை சம்பளத்தை உயர்த்திய நேரம், பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துவிட்டதாம். இதனால் ஓரிரு படங்களில் மட்டும் முக்கிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்தாராம். தற்போது பல இளம் நடிகைகள் குறைந்த சம்பளத்தில் ஆதிக்கம் செலுத்துவதால், நடிகையும் தனது சம்பளத்தை குறைக்க முடிவு செய்து இருக்கிறாராம். இனிமேலாவது நடிகைக்கு படவாய்ப்புகள் வருகிறதா என்று பொருத்து இருந்துதான் பார்க்கணும்...
Tags:    

Similar News