கிசுகிசு
சர்ச்சை நடிகர் என்று பெயர் பெற்றவர், தனது மனதை மாற்றி இருப்பது பலரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்.
தமிழ் சினிமாவில் சிறுவயதில் இருந்து நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சில ஆண்டுகளாக சர்ச்சையில் சிக்கி இருந்தாராம். படப்பிடிப்பு செல்லாமல் தனது நாட்களை கழித்து வந்த நடிகர், பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததால் வெற்றி படத்தில் நடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் தள்ளப்பட்டாராம்.
ஒருவழியாக ஒரு படத்தில் நடித்து வெற்றி பெற்றிருக்கும் நடிகர், இனிமேல் தான் நடிக்கும் படங்களுக்கு சம்பளமாக பாதி தொகை மட்டும் வாங்கலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம். இதுவரை அதிக சம்பளம், வீட்டிற்கு தனி, எனக்கு தனி சம்பளம் என்று வாங்கி வந்த நடிகரின் இந்த மன மாற்றத்தை பலரும் ஆச்சரியமாக பார்க்கிறார்களாம்.