சினிமா செய்திகள்

ஜாக்குலின் பெர்ணாண்டஸ்

ரூ.200 கோடி மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் வாக்குமூலம்

Published On 2022-11-27 10:09 GMT   |   Update On 2022-11-27 10:09 GMT
  • ரூ.200 கோடி மோசடி வழக்கில் கைதாகி ஜெயில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்பில் இருந்ததாக நடிகை ஜாக்குலின் சர்ச்சையில் சிக்கினார்.
  • இந்த வழக்கில் நடிகை ஜாக்குலின் நீதிபதி முன்பு வாக்குமூலம் அளித்தார்.

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஜாக்குலின் பெர்ணாண்டஸ், ரூ.200 கோடி மோசடி வழக்கில் கைதாகி ஜெயில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்பில் இருந்ததாக சர்ச்சையில் சிக்கினார். இதுகுறித்து அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்களை ஜாக்குலின் பெற்றதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. ஜாக்குலின் வெளிநாடு செல்லாமல் இருக்க பாஸ்போர்டையும் முடக்கியது.


ஜாக்குலின் பெர்ணாண்டஸ்

தற்போது இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது சுகேஷ் சந்திர சேகருடனான தொடர்பு குறித்து நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸ் வாக்குமூலம் அளித்தார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையின்போது குற்றவியல் நடைமுறை சட்டம் 164-ன்படி மாவட்ட நீதிபதி முன்பு வாக்குமூலம் அளிப்பதாக இருந்தால் விவரங்களை பகிர்வதாக ஜாக்குலின் பெர்ணாண்டஸ் தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் நீதிபதி முன்னிலையில் அவர் வாக்குமூலம் அளித்தார். அதே நேரத்தில் வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை ஜாக்குலின் மறுத்ததாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News