சினிமா செய்திகள்
விஜய் ஆண்டனி

அனுமதியின்றி படப்பிடிப்பு.. விஜய் ஆண்டனி படக்குழுவினர் கைது..?

Published On 2022-12-13 17:26 IST   |   Update On 2022-12-13 17:26:00 IST
  • விஜய் ஆண்டனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பிச்சைக்காரன் -2’.
  • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.


பிச்சைக்காரன்

இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


பிச்சைக்காரன் -2 படக்குழு

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பார் கவுன்சில் வளாகத்தை அனுமதி பெறாமல் ட்ரோன் மூலம் படம் பிடித்ததாக கூறி 'பிச்சைக்காரன் -2' படக்குழுவினர் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் ஜாமீனில் விடுவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News