சினிமா செய்திகள்

இளையராஜா

தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்திய இளையராஜா

Published On 2022-08-15 08:26 GMT   |   Update On 2022-08-15 08:26 GMT
  • தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்து மக்களின் மனங்களை கவர்ந்தவர் இளையராஜா.
  • சில தினங்களுக்கு முன்பு மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா தமிழில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார்.

 

விளையாட்டு, சமூகசேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களை பாராளுமன்ற மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமிக்கும் நடைமுறைப்படி, இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா பதவியேற்று அவர் தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

 

இந்நிலையில் 75-வது சுதந்திர தின விழாவை திருவண்ணாமலையில் உள்ள ரமாண ஆசிரமத்தில் இளையராஜா தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News