சினிமா செய்திகள்

ஜெயபிரதா

பிரபல நடிகைக்கு பிடிவாரண்ட்.. நீதிமன்றம் அதிரடி

Published On 2022-12-22 16:03 IST   |   Update On 2022-12-22 16:03:00 IST
  • 90-களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஜெயபிரதா.
  • இவருக்கு எதிரான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார்.

90-களில் பிரபல நடிகையாக வலம் வந்த ஜெயபிரதா, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மொழி படங்களில் நடித்தும் பிரபலமடைந்தார். தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும் ஜெயபிரதா கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

 

ஜெயபிரதா

அந்தத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஜெயபிரதா தேர்தல் விதிமுறைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு காவல்நிலையத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தபோது ஜெயபிரதா நேரில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனால் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 

Tags:    

Similar News