சினிமா செய்திகள்

ஜெய்

இது ரொம்பவும் சிக்கலான திரைக்கதை - நடிகர் ஜெய்

Published On 2022-09-26 11:04 GMT   |   Update On 2022-09-26 11:04 GMT
  • சுந்தர்.சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் நாயகிகள் நடிக்கும் படம் காபி வித் காதல்.
  • இப்படத்தின் அனுபவம் குறித்து படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடிக்கும் படம் காபி வித் காதல். இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.


காபி வித் காதல்

இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. அண்மையில்  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது.


காபி வித் காதல்

இந்நிலையில், இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர்கள் கூறியுள்ளனர். இதில் நடிகர் ஜெய் பேசியதாவது, "இந்த படத்தோட முதல் பாதி சொல்லி முடித்ததும் நான் சுந்தர் சி சாரிடம் கேட்ட முதல் கேள்வி இதை எப்படி யோசித்தீர்கள்.

ஏனென்றால் இது மிகவும் சிக்கலான கதை. அதை அழகா புரிகின்ற மாதிரி கூறினார். இந்த படத்தின் கதை இதயத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்தது" என தனது பல அனுபவங்களை பகிர்ந்துள்ளார். 


Full View


Tags:    

Similar News