சினிமா செய்திகள்

அமீஷா படேல்

null

செக் மோசடி வழக்கு.. நடிகை அமீஷா படேலுக்கு ரூ.500 அபராதம் விதித்த நீதிமன்றம்

Published On 2023-07-27 14:30 IST   |   Update On 2023-07-27 14:30:00 IST
  • 'தேசிமேஜிக்' படத்தில் நடிப்பதற்காக நடிகை அமீஷா படேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
  • பின்னர் கால்ஷீட் தருவதில் அமீஷா படேல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.

'தேசிமேஜிக்' படத்தில் நடிப்பதற்காக நடிகை அமீஷா படேலுக்கு ரூ.2.5 கோடி பேசப்பட்டு அதற்கான பணத்தை தயாரிப்பாளர் அஜய்குமார்சிங் வழங்கினார். ஆனால் நடிகை அமீஷா படேல் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் கால்ஷீட் தருவதில் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.


இதைத்தொட்ந்து அஜய்குமார் சிங் தான் நடிப்பதற்காக கொடுத்த பணத்தை திரும்ப வழங்குமாறு கேட்க அமீஷா படேல் அதற்காக காசோலை வழங்கி உள்ளார். அந்த காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் அஜய் குமார்சிங் மற்றும் மானேஜர் திங்குசிங் இருவரும் நடிகை அமீஷா படேல் மீது ராஞ்சி கோர்ட்டில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கு தொடர்பாக நேற்று விசாரணை நடைபெற்ற போது நடிகை அமீஷா படேல் தரப்பு வக்கீல் குறிப்பிட்ட நேரத்தில் கோர்ட்டில் ஆஜராகாததால் கோர்ட்டு நேரத்தை வீணடித்ததற்காக நடிகை அமீஷா படேலுக்கு ஜுடிசியல் மாஜிஸ்திரேட் சுக்லா ரூ.500 அபராதம் விதித்தார். மேலும் வழக்கு விசாரணையை வருகிற 7-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News