சினிமா
சஞ்சய் தத்

நான் எந்த கட்சியிலும் சேர மாட்டேன் - சஞ்சய் தத்

Published On 2019-08-27 03:15 GMT   |   Update On 2019-08-27 02:53 GMT
அரசியல் கட்சி ஒன்றில் சேரப்போவதாக கூறப்பட்ட நிலையில், தான் எந்த கட்சியிலும் இணைய மாட்டேன் என்று நடிகர் சஞ்சய் தத் மறுப்பு தெரிவித்து உள்ளார்.
மராட்டியத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அரசில் ராஷ்டிரீய சமாஜ் கட்சி அங்கம் வகிக்கிறது. இந்த நிலையில் அந்த கட்சியின் தலைவரும், மாநில கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை மந்திரியுமான மகாதேவ் ஜன்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “விரைவில் நடக்க உள்ள மராட்டிய சட்டமன்ற தேர்தலில் கூடுதல் இடங்கள் வழங்கும்படி பா.ஜனதாவிடம் கேட்கப்பட்டு உள்ளது.

மேலும் ராஷ்டிரிய சமாஜ் கட்சியை வலுப்படுத்துவதன் ஒரு பகுதியாக பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் அடுத்த மாதம் (செப்டம்பர்) 25-ம் தேதி எங்கள் கட்சியில் இணைவார்” என்று தெரிவித்தார்.



ஆனால் இந்த தகவலை சஞ்சய் தத் மறுத்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “நான் எந்த கட்சியிலும் சேர மாட்டேன். மகாதேவ் ஜன்கர் எனது அன்பு நண்பர் மற்றும் என்னுடைய சகோதரர் போன்றவர். அவரின் எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறி உள்ளார்.
Tags:    

Similar News