சினிமா
கிரிக் பார்டி படம் மூலம் மிகவும் பிரபலமான சம்யுக்தா ஹெக்டே, தற்போது நட்டு தேவ் இயக்கும் பப்பி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிரார். #SamyukthaHegde
கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்டி’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சம்யுக்தா ஹெக்டே. முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததுடன் அவரின் நடிப்பும் பெரியளவில் பேசப்பட்டது. தொடர்ந்து கன்னடத்தில் நடித்த அவர் கிரிக் பார்டி படத்தின் ரீமேக் மூலம் தெலுங்கில் களம் கண்டார். தற்போது அறிமுக இயக்குநர் நட்டு தேவ் இயக்கும் ‘பப்பி’ என்ற படத்தின் மூலம் அவர் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.
நட்டு தேவ் ‘காக்கா முட்டை’ திரைப்படத்தை இயக்கிய மணிகண்டனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். தமிழில் நடிக்க பல கதைகள் வந்த போதும் தவிர்த்து வந்த அவர் நட்டு தேவ்வின் திரைக்கதை பிடித்துப்போக உடனே சம்மதித்துள்ளார்.
படத்தின் தலைப்பிற் கேற்றவாறு ஒரு நாயை மையமாக வைத்துக் கதை பயணிக்கிறது. படத்தின் ஆரம்பக் கட்டப்பணிகள் நடைபெற்றபோதே திரைக்கதை குறித்து இயக்குநர் குழு சம்யுக்தாவிடம் விளக்கியதால் வசனங்களை ‘ப்ராம்ட்’ செய்யாமல் பேசி வருகிறார்.