மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
null

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2023

Published On 2022-05-20 09:58 GMT   |   Update On 2023-04-10 06:51 GMT

ஆற்றல் மிகுந்த மேஷராசியினரே ராசிக்கு 12 ல் குருபகவான் சஞ்சரிக்கிறார். ராசியில் ராகுவும் 7ல் கேதுவும், சனி பகவான் 10, 11ம் இடத்திலும் பயணிக்கிறார்கள்.

12ம்மிட குருவின் பொதுபலன்கள்: மேஷத்திற்கு குரு 9,12ம் அதிபதி.9ம்மிடம் என்பது பாக்கிய ஸ்தானம்,12ம்மிடம் என்பது விரய ஸ்தானம், அயன, சயன ஸ்தானம். தூர தேச பயணத்தைக் குறிக்குமிடம். 12ம் இடத்திற்கு சனிப் பார்வை உள்ளது. 12ல் உள்ள குருவை சனி பார்ப்பது தர்ம கர்மாதிபதி யோகம்.

சற்றேறக் குறைய இந்த யோகம் 17.1.2023 வரை உள்ளது. இது வரை உங்கள் முன்னோர்களும் நீங்களும் செய்ததர்மம் உங்களை காக்கும் நேரம். உழைப்பும் முயற்சியும் உங்களுக்கு வெற்றியை தரும். தொழில் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். செய்யும் வேலையை சீரும் சிறப்புமாக செய்வீர்கள். செய்யும் தொழிலேதெய்வம் என்ற சிந்தனை இருக்கும். தொழில் ரீதியான புதிய நட்பு வட்டாரங்கள் கிடைக்கும். உயரிய சிந்தனை, செயல்திறன் இருக்கும். தொழிலுக்காக அடிக்கடி வெளியூர், வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள நேரும்.

வியாபாரத்தை முறையாக திட்டமிட்டு முழுமையாக செயல்படுத்தி வெற்றிக்கனியை சுவைப்பீர்கள். பொருளாதாரத்தில் சீரான சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தை தேடி அலைந்த கொண்டிருந்த உங்களுக்கு திறமை, முயற்சி, பொறுமை, உழைப்பு ஆகியவற்றை கற்றுக் கொடுத்து வெற்றியை தர குருவும், சனியும் தயாராகிவிட்டார்கள். உங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் பத்தாமிடசனியும், பனிரென்டாமிட குருவும், உழைப்புக்கேற்ற ஊதியத்தை நிச்சயம் வழங்குவார்கள். சனி தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால்இந்த கால கட்டத்தில் புதிய தொழில் துவங்கும் ஆர்வம் பலருக்கும் அதிகரிக்கும். இந்த குருப் பெயர்ச்சி முடியும் வரை புதிய தொழில் தொடங்குவதையும் பெரிய முதலீடுகள் செய்வதையும் தவிர்ப்பது நல்லது.

பாக்கியாதிபதி விரய ஸ்தானம் செல்வதால் சிலர் பூர்வீகத்தை விட்டு ஜீவனத்திற்கு வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். சிலருக்கு சுப விரயம் ஏற்படலாம். சிலர் மன நிம்மதிக்காக பரவச நிலையை அடையச் செய்யும் பக்தி மார்க்க இயக்கத்தில் இணைந்து நிம்மதி தேடலாம். சிலர் இறைவனுக்கு தொண்டு செய்வதே என் கடமை என முழு நேர ஆன்மீகவாதியாக மாறலாம். சிலர் ஆன்மீகப் பணிகள், பொதுச் சேவை மற்றவர்களுக்கு உதவுதல் என நேரம் காலம் பார்க்காமல் தொண்டு செய்வீர்கள். சிலருக்கு சொத்து விற்பனையில் இழப்பு உண்டாகலாம். சிலர் ஒப்பந்த வேலைக்காக குறுகிய காலம் பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம். திருமண முயற்சிகள் இழுபறியாகும். ராசியில் ராகுவும் 7ல் கேதுவும் இருப்பது சிறப்பான பலன் அல்ல. கெட்ட சகவாசத்தை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை வங்கி லாக்கரில் வைக்கவும்.

5ம் பார்வை பலன்கள்:ராசிக்கு 4ம் இடத்திற்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது. 4ம் இடம் என்பது சுகஸ்தானம், மாத்ரு ஸ்தானம். கல்வி, சொத்து சுகம் பற்றிக் கூறுமிடம். சனிப் பார்வையும் சேர்ந்து இருப்பதால் கல்வி சம்பந்தமான முயற்சிகள் கால தாமதத்திற்குப் பிறகு சித்திக்கும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. தாயின் ஆசியும் உதவிகளும் கிடைக்கும். சனிப் பார்வை இருப்பதால் தாயின் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் இருந்தாலும் பாதகம் ஏற்படாது.

தாய் வழிச் சொத்திற்காக தாய் மாமனுடன் நிலவிய கருத்து வேற்றுமை சீராகும். இதுவரை வாகன யோகம் இல்லாதவர்களுக்கு அசையும் சொத்து பிராப்தம் உண்டாகும். சிலர் செகண்ட் ஹேண்ட் வாகனம் வாங்கி பயன்படுத்துவார்கள். சிலர் கடன்பட்டு புதிய வீடு கட்டி குடியேறுவார்கள். சிலர் வாஸ்துப் படி வீட்டை திருத்தி அமைப்பார்கள். சிலர் வாடகை வியாபார ஸ்தலத்தை சொந்தமாக்கி கொள்வார்கள். சிலர் தொழிலுக்கு புதியதாக கட்டடம் கட்டும் யோகம் உண்டாகும். பூமி சம்பந்தமாக இருந்த வம்பு வழக்கு, தடை, தாமதங்கள் சீராகும். பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை சுமுகமாகும்.சிலர் பணத் தேவைக்கு சொத்துகளை விற்கும் வாய்ப்பும் உள்ளது. இந்த காலகட்டத்தில் பலர் குறைந்த முதலீட்டில் சில்லறை வணிகம் தொடங்குவார்கள் அல்லது சிலர் முதலீடு இல்லாத பேச்சை மூலதனமாக கொண்ட தொழில் துவங்கி புகழ், சம்பாத்தியம் கிடைக்கப் பெறுவார்கள்.

7ம் பார்வை பலன்கள்:குருவின் 7ம் பார்வைராசிக்கு 6ம் இடத்திற்கு உள்ளது. 6ம் இடம் என்பது ருண, ரோக, சத்ரு ஸ்தானம். வாங்கிய கடனை திருப்பி செலுத்தக் கூடிய மார்க்கம் தென்படும். ஒருவரின் சம்பாத்தியத்தில் அடிப்படை தேவைக்கே சிரமப்பட்ட குடும்பங்களுக்கு பிள்ளைகளின் மூலம் உபரி வருமானம் வரலாம். சிலருக்கு கடன் வழங்க நிதி நிறுவனங்கள் போட்டி போட்டு வீட்டு வாசலுக்குச் வருவார்கள்.

புதுக் கடன் வாங்கி பழைய கடனை அடைக்கலாம்.பணம் தொடர்பான வழக்குகள் தள்ளுபடியாகும். சிலருக்கு வேலைப் பளு மிகுதியால் மிகுதியான உடல் அசதிஇருக்கும். நோயின் தன்மை புரியாமல் பல நாட்களாக பல ஆஸ்பத்தரிக்கு அலைந்தவர்களுக்கு நோய்க்கான காரணம் புரியும். மிகக் குறைந்த செலவில் மாற்று வைத்தியத்தில் நோய் குணமாகும். சிலர் உடல் நல பாதிப்பிற்கு மருத்துவமனையில் தங்கிவைத்திய செலவு செய்ய நேரும். சிலர் நண்பர்களுக்கு ஜாமீன் பொறுப்பேற்று அசலையும், வட்டியையும் சேர்த்து கட்டுகிற நிலை ஏற்படும். ஜென்மத்தில் ராகு இருப்பதால் எளிதில் அண்டை, அயலார் மற்றும் நண்பர்கள் மூலம் பகை உண்டாகும். சிலருக்கு தொழில், உத்தியோக ரீதியாக புதிய எதிரிகள் உருவாகுவார்கள். எனினும் 6ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் அனைத்தும் தவிடு பொடியாகும்.

9ம் பார்வை பலன்கள்:குருவின் 9ம் பார்வை ராசிக்கு 8ம் இடத்திற்கு பதிகிறது. 8ம்மிடம் என்பது வம்பு, வழக்கு , விபத்து அவமானம், அசிங்கம் போன்றவற்றைக் குறிக்குமிடம்.ஒரு மனிதனுக்கு ஏற்படும் பிரச்சனையை இரண்டாக வகைப்படுத்தலாம். முதல் வகை விதி வசத்தால் தானாக வருவது.

இரண்டாவது ரகம் வம்பை விலை கொடுத்து வாங்குவது. முதல் வகைப்படி வழக்குகளில் சாதகமான தீர்ப்பு ஏற்படாது. மலைபோல் நம்பிய நபர்கள் ஏமாற்றலாம். உடன் பிறந்தவர்கள், நண்பர்கள், உறவுகள் ஏமாற்றலாம். அல்லது சூழ்நிலை கைதியாக யாரோ செய்த குற்றத்திற்கு தண்டனை அனுபவிக்கலாம்.

குடும்பச் சொத்துக்கள் கைமாறிப் போகலாம். இரண்டாவது வகைப்படி பேசியே குடும்ப உறவுகளை வதைக்தலாம். தவறான உணவுப் பழக்கத்தால் கூடாத நட்பால், போதைப் பழக்கத்தால் தீராத நோயை வரவழைக்கலாம். சட்டத்திற்கு புறம்பான விசயத்தில் ஈடுபட்டு சட்டத்தின் பிடியில் சிக்கலாம். அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை வைத்து லாட்டாரி, ரேஸ் என பணத்தை இழக்கலாம்.

கணவரின் ஆரோக்கிய குறைபாட்டால் கவலை அடைந்த பெண்களுக்கு நிம்மதி கிடைக்கும். ஆயுள் குறைபாடு நீங்கும். மாங்கல்ய தோஷம் நீங்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டில் வசித்த தந்தை சொந்த ஊர் திரும்புவார்.

குருவின் வக்ர பலன்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை

குருபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரம் அடையும் காலத்தில் காரிய அனுகூலம், பொருளாதார வளர்ச்சி, குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் தொழில் விருத்தியை ஏற்படுத்தி தருவார். மனம் பற்றற்ற நிலையை விரும்பும். எதிர்மறை எண்ணங்கள் சீராகும். தீய, கெட்ட சிந்தனைகள் நீங்கி தெளிவு பிறக்கும். அவமானங்கள், அவ நம்பிக்கைகள் விலகி குடும்ப பிரச்சனைகள் பேச்சு வார்த்தையின் மூலம் சுமூகமான முடிவிற்கு வரும். கடனுக்காக அல்லது குடும்ப பிரச்சனைக்காக தலைமறைவாக வாழ்ந்தவர்கள் வீடு திரும்புவார்கள்.

சிலருக்கு தனிமையாக வாழ வேண்டும் என்ற உணர்வு சற்று மிகைப்படுத்தலாக இருக்கும்.மனம் எளிமையை விரும்பும்.ஓய்விற்காக வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் மகன் அல்லது மகள் வீட்டிற்குச் சென்றவர்கள் வீடு திரும்பலாம்.சிலர் இரண்டாவது தொழில் தொடங்கும் எண்ணம்அதிகரிக்கும். பண விஷயத்தில் சற்று நெருக்கடி குறையும். பங்குச் சந்தை முதலீட்டில் ஆதாயம் உண்டாகும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். திருமண முயற்சிகள் பலிதமாகலாம்.

பெண்கள்: பெண்கள் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்ப்பீர்கள். வீட்டிலும் வேலை பார்க்கும் இடத்திலும் பணிச்சுமை மிகுதியாகும்.பொறுப்புகள் அதிகரிக்கும். பெண்கள் ஆடம்பரச் செலவைக் குறைத்து சிக்னமாக வாழ முயற்சிக்க வேண்டும். உற்றார் உறவினர்கள் மத்தியில் உங்கள் கவுரவம் உயரும். விலை உயர்ந்த பொருட்களை நண்பிகளுக்கு இரவல் கொடுப்பது, வாங்குவதை தவிர்க்கவும்.

பரிகாரம்:தினமும் திருக்கோளற்றுப் பதிகம் பாராயணம் செய்யவும். நவகிரக குருவிற்கு நாட்டு சர்க்கரை வைத்து வழிபட்டு தானம் வழங்க விரயம் கட்டுப்படும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News