ஆன்மிக களஞ்சியம்
null

ஸ்ரீ மஹா கணபதி காயத்ரி மந்திரம்

Published On 2023-11-11 12:38 GMT   |   Update On 2023-11-11 12:49 GMT
  • இந்த மந்திரத்தை ஒரு வருடம் வரை ஜபித்து வந்தால் நியாயமான ஆசைகள் நிறைவேறும்.
  • இதை தொடர்ந்து ஜபித்து வந்தால் கணபதி கடவுளை நேரில் சந்திக்க முடியும்.

"ஓம் ஏகதந்தாய வித்மஹே

வக்ர துண்டாய தீமஹி

தன்னோ தந்தி ப்ரசோதயாத்"

இந்த மந்திரத்தை செபித்து வர காரியத் தடைகள் நீங்கும்.

எல்லா வளமும் நலமும் அமையும்.

குறிப்பிட்ட காரியத்திற்காக வெளியில் கிளம்பும் முன் இந்த மந்திரத்தை 3 முறை செபித்து கணபதியை வேண்டி செல்ல காரிய சித்தி கிட்டும்.

கடை,தொழில் இடங்களில் திறந்து அமரும் முன் இதை 3 தடவை செபித்து கணபதியை வேண்டிய பின் அமரத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

இதை ஒரு வியாழன் அல்லது ஞாயிற்றுக் கிழமை ஜெபிக்கத் தொடங்கலாம்.

எந்த சூழ்நிலையிலும் கணபதியுடைய காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.

இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து விட்டு கணபதி சன்னதி முன்பாக கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து 3ன் மடங்குகளில் ஜபித்து வர வேண்டும்.

இதனால் நமது பாவங்கள் தீரதொடங்கும். உங்களின் நீண்ட கால பிரச்சனைகள் தீரத் தொடங்கும்.

இந்த மந்திரத்தை ஒரு வருடம் வரை ஜபித்து வந்தால் நியாயமான ஆசைகள் நிறைவேறும். இது அனுபவ உண்மை.

ஒம் கம் கணபதியே நமஹ

இது கணபதியின் மூல மந்திரம்.

இதை தொடர்ந்து ஜபித்து வந்தால் கணபதி கடவுளை நேரில் சந்திக்கமுடியும்.

இதற்கு 4.00,000ம் தடவை தொடர்ந்து ஜபித்து வரவேண்டும்.

இதுவும் பல ஆயிரம் தமிழ் மக்களின் அனுபவ உண்மை.

இன்றும் கூட கணபதியின் ஆத்ம சமாதி இமயமலையின் 13 ஆம் அடுக்கில் இருக்கிறது என்பது பல ஆன்மீக அன்பர்களுக்கு தெரிந்த செய்தி!!!

Tags:    

Similar News