ஆன்மிக களஞ்சியம்

சகல சவுபாக்கியங்களும் பெற

Published On 2024-03-25 11:58 GMT   |   Update On 2024-03-25 11:58 GMT
  • ஆவணி மாத பூஜையில் நான்கு வண்ணங்கள் கொண்ட ஆடை சார்த்தி வைடூரிய ஆபரணம் அணிவிக்க வேண்டும்.
  • புரட்டாசி பவுர்ணமியில் உமாமகேஸ்வர விரதமும் மேற்கொள்வது சிறப்பானது.

ஆவணி மாத பூஜையில் நான்கு வண்ணங்கள் கொண்ட ஆடை சார்த்தி வைடூரிய ஆபரணம் அணிவிக்க வேண்டும்.

நாட்டுச் சர்க்கரையால் அபிஷேகம் செய்து, நெய் சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.

இந்த பூஜை செய்வதன் மூலம் கடன் தொல்லைகள் தீர்ந்து நன்மை பெறலாம்.

ஆவணி பவுர்ணமியில் ரட்சா பந்தனமும் விசேஷமானது.

புரட்டாசி பவுர்ணமி அன்று அம்மனுக்கு நான்கு வண்ணங்களில் ஆடையும், பிரவாள ரத்தினக்கல் ஆபரணமும் அணிவித்தல் வேண்டும்.

மல்லிகைப் பூவால் அர்ச்சிப்பது சிறப்பானது.

நைவேத்தியம் - இளநீர்.

இந்த பூஜையின் பலனாக சகல சவுபாக்கியங்களும் கிட்டும்.

புரட்டாசி பவுர்ணமியில் உமாமகேஸ்வர விரதமும் மேற்கொள்வது சிறப்பானது.

Tags:    

Similar News