ஆன்மிக களஞ்சியம்

கோவில் கொடியேற்றத்தில் கருடன்

Published On 2023-12-10 18:26 IST   |   Update On 2023-12-10 18:26:00 IST
  • அந்த கொடியில் ஸ்ரீ கருடனின் திருஉருவமே எழுதப்பட்டிருக்கும்.
  • அந்தக் கொடியையே மிகவும் பவித்ரமாக உயரே ஏற்றி வழிபடுகிறோம்.

நம் நாட்டில் உள்ள மிகப்பெரிய கோவில்களில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின்போது,

அக்கோவிலின் கொடி மரத்தில் வேத மந்திரங்களோடு கொடியை ஏற்றுவது வழக்கம்.

அந்த கொடியில் ஸ்ரீ கருடனின் திருஉருவமே எழுதப்பட்டிருக்கும்.

அந்தக் கொடியையே மிகவும் பவித்ரமாக உயரே ஏற்றி வழிபடுகிறோம்.

இதற்கும் காரணம், கருடன் வேத வடிவானவன் என்பதால், இங்கு வேதத்திற்கே முதலிடம் கொடுத்து உயரே வைத்துள்ளனர்.

Tags:    

Similar News