search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீ விபத்து"

    • இந்த வெடி விபத்தால் அருகில் இருந்த கார் ஷோ ரூம் மற்றும் வாகனங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
    • இந்த விபத்தில் 35-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் டோம்பிவிலி பகுதியில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலையில் உள்ள பாய்லர் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பாய்லர் வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பெருமளவிலான கரும்புகை உருவாகி அதிலிருந்து சாம்பல்கள் மழைச்சாரல் போல கீழே விழுந்ததாகவும் 3 முறை வெடி சத்தம் கேட்டதாகவும் சுமார் 3-4 கிமீ வரை அதிர்வு உணரப்பட்டதாகவும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் கூறியுள்ளனர்.

    இந்த வெடி விபத்தால் அருகில் இருந்த கார் ஷோ ரூம் மற்றும் வாகனங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

    இந்த விபத்தில் 35-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பேரிடர் மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    தொழிற்சாலைக்குள் இன்னும் எத்தனை தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர் என்கிற விபரம் இன்னும் தெரியவில்லை

    இந்த தீ விபத்து தொடர்பாக மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இந்த தீ விபத்து தொடர்பாக 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. . நான் மாவட்ட ஆட்சியருடன் பேசியுள்ளேன். மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன" என்று பதிவிட்டுள்ளார்.

    • சென்னை வான்வெளியை கடந்து செல்லும் விமானங்கள் உட்பட அனைத்து விமான சேவைகளையும் இந்த மையம் கண்காணிக்கும்.
    • விமான நிலைய உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில், விமான சேவைகளை ஒருங்கிணைக்கும் மிகவும் முக்கியமான கட்டுப்பாட்டு அறை 4-வது தளத்தில் உள்ளது. இது அதிக பாதுகாப்புமிக்க இடம் ஆகும். சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்கள், தரையிறங்கும் விமானங்கள், விமான நிலையத்தில் தரையிறங்காமல் சென்னை வான்வெளியை கடந்து செல்லும் விமானங்கள் உட்பட அனைத்து விமான சேவைகளையும் இந்த மையம் கண்காணிக்கும்.

    இந்நிலையில் இந்த இந்த நிலையில் இங்குள்ள அறையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில், திடீரென தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால், விமான கட்டுப்பாட்டு அறைக்கோ, விமான சேவைகளுக்கோ எந்த பாதிப்பும் இல்லை.

    மின்கசிவு காரணமாக அந்த அறையில் இருந்த பழைய பொருட்கள் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விமான நிலைய உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசியதில் ஏற்பட்ட தீப்பொறி தேங்காய் பருப்பு மூட்டையின் மீது விழுந்து தீப்பற்றிக் கொண்டது.
    • லாரியை நிறுத்திய டிரைவர் உடனடியாக காங்கயம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

    முத்தூர்:

    காங்கயம் அருகே தேங்காய் பருப்பு ஏற்றிச் சென்ற லாரியில் தீப்பிடித்ததில் ரூ.14 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்பு மற்றும் லாரி எரிந்து சேதமானது.

    காங்கயம் அடுத்துள்ள சிவியார்பாளையத்தை சேர்ந்தவர் சதாசிவம். தேங்காய் களம் வைத்து நடத்தி வருகிறார். இங்கு உலர்த்தப்பட்ட சுமார் 15 டன் அளவுள்ள தேங்காய் பருப்புகளை மூட்டையில் கட்டி, அதனை எடைபோடுவதற்காக நால்ரோடு பகுதியில் உள்ள எடை மேடை நிலையத்திற்கு லாரியில் கொண்டு சென்றனர். லாரியை ராசிபுரத்தை சேர்ந்த தர்மலிங்கம்(47) ஓட்டிச் சென்றார். காங்கயம் அருகே பரஞ்சேர்வழி சிவியார்பாளையம் சாலையில் தனியார் கிரஷர் அருகில் சென்றபோது தாழ்வாக சென்ற மின்கம்பியில் தேங்காய் பருப்பு லோடு உரசியதாக கூறப்படுகிறது. இதில் மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசியதில் ஏற்பட்ட தீப்பொறி தேங்காய் பருப்பு மூட்டையின் மீது விழுந்து தீப்பற்றிக் கொண்டது. தேங்காய் பருப்பு மூட்டையிலிருந்து புகை வந்ததைக் கண்டவர்கள் உடனடியாக டிரைவரிடம் தெரிவித்தனர்.

    லாரியை நிறுத்திய டிரைவர் உடனடியாக காங்கயம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதற்குள் தீ குபு குபுவென பரவி லாரி முழுவதும் பற்றி எரிந்து, பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க முயன்றனர். மேலும் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டு அங்கிருந்தும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் தேங்காய் பருப்பு மூட்டைகள் மற்றும் லாரி முழுவதும் எரிந்து சேதமானது. எரிந்து சேதமான தேங்காய் பருப்பின் மதிப்பு ரூ. 14 லட்சம் மற்றும் லாரியின் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரியானாவில் இன்று அதிகாலை சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்தது.
    • இந்த விபத்தில் 8 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் நு நகரில் இன்று அதிகாலை சுற்றுலா பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் 8 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். மேலும் 24 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    முதல் கட்ட விசாரணையில், சுற்றுலா பேருந்தில் மொத்தம் 60 பேர் பயணம் செய்தனர் என்றும், ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா சென்றதும் தெரிய வந்துள்ளது. தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை.

    ஆன்மிக சுற்றுலா சென்ற பேருந்து தீவிபத்தில் சிக்கி 8 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தீ விபத்து ஏற்பட்டதால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
    • விமானத்தில் 175 பேர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

    பெங்களூரில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து டெல்லி விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது.

    விமானத்தில் ஏர் கண்டிஷனிங் யூனிட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, இன்று மாலை 6.40 மணியளவில் விமானம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக தரையிறக்கப்பட்டது.

    ஏஐ 807 என்ற விமானம் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானத்தில் 175 பேர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

    இதைதொடர்ந்து, பயணிகளை பெங்களூரு செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக விமான நிறுவன அதிகாரி தெரிவித்தார்.

    • ஏசியில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
    • மேல்மாடியில் இருந்த பணியாளர்கள் ஜன்னல்கள் வழியாக வெளியேற்றினர்.

    டெல்லி ஐடிஒ பகுதியில் அமைந்துள்ள வருமான வரித்துறை அலுவலகத்தின் 4வது மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    ஏசியில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். 21 தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்க வந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

    தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, கட்டடங்களில் மேல்மாடியில் இருந்த பணியாளர்கள் ஜன்னல்கள் வழியாக வெளியேறினர்.

    இருப்பினும், டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிப்புரிந்து வந்த ஒருவர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்யப்படுவது மோட்டார் வாகன சட்டம் விதிகளின்படி குற்றம்.
    • சிஎன்ஜி/ எல்பிஜி மாற்றங்கள் செய்யப்படுவதால் வாகனங்களில் தீ பற்றுகிறது.

    சமீப காலமாக மோட்டார் வாகனங்கள் தானாக பற்றி எரியும் தீ விபத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்யப்படுவது மோட்டார் வாகன சட்டம் விதிகளின்படி குற்றம் என போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேலும், வாகன உரிமையாளர்கள் இவ்வகையான செய்கையில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தகுதியில்லாத நிறுவனங்களால், அங்கீகரிக்கப்படாத சிஎன்ஜி/ எல்பிஜி மாற்றங்கள் செய்யப்படுவதால் வாகனங்கள் தீ விபத்துக்குள்ளாகின்றன என கூறப்படுகிறது.

    • தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோன் மற்றும் மர பர்னிச்சர் தயாரிக்கு கிடங்கில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

    தீ விபத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்பும் ஏற்படவில்லை. அப்பகுதி முழுவதும் கரும்புகையாக சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

    தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • சிமெண்ட் ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
    • தனியார் சிமெண்ட் ஆலை தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர் மாவட்டம் ஓட்டக்கோவில் கிராமத்தில் தனியார் சிமெண்ட் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில், சிமெண்ட் ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், சிமெண்ட் ஆலையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளில் தீ பற்றியது. தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தால் ஆலையை சுற்றி பல கிலோ மீட்டர் தொலைவிற்கு கரும்புகை சூழ்ந்தது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டனர். தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனியார் சிமெண்ட் ஆலை தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீயணைப்பு நிலைய மீட்பு படையினர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
    • தீ விபத்தில் பள்ளி மாணவர்கள் சீருடைகள், பழைய ரெக்கார்டு பதிவேடுகள் அனைத்தும் தீயில் கருகியது.

    தா.பேட்டை:

    திருச்சி மாவட்டம் தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வட்டார கல்வி அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு தா.பேட்டை ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் பதிவேடுகள், பள்ளி மாணவ, மாணவிகள் குறித்தான அனைத்து பதிவேடுகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் இந்த வட்டார கல்வி அலுவலகத்தின் அருகே காலியாக இருந்த இடத்தில் சருகுகள், காய்ந்த கட்டைகள் கிடந்தது. நள்ளிரவில் இதில் எதிர்பாராத விதமாக பட்ட நெருப்பு வட்டார கல்வி அலுவலகத்தின் உள்ளே பரவி உள்ளது.

    நள்ளிரவு முழுவதும் உள்ளே எரிந்த நிலையில் அதிகாலை அலுவலகத்தில் இருந்து புகை வருவதை அப்பகுதியினர் பார்த்து தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து முசிறி தீயணைப்பு நிலைய மீட்பு படையினர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த ஆசிரியர்கள் அப்பகுதியினர் விரைந்து வந்து பீரோ கணினிகள் உள்ளிட்ட வைகளை உடனடியாக வெளியே கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பள்ளி மாணவர்கள் சீருடைகள், பழைய ரெக்கார்டு பதிவேடுகள் அனைத்தும் தீயில் கருகியது.

    • கடையில் இருந்து தீ பரவி வருவதாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் .
    • மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பெரியவலசு கொங்கு நகர் 3-வது வீதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் அதே பகுதியில் கடந்த பல வருடங்களாக வீடு மற்றும் கடைகளுக்கு தேவையான பர்னிச்சர் பொருள்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.

    இவரது கடையில் சுமார் 5-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடையில் மர சாமான்கள் அதிக அளவில் இருந்தன.

    இந்நிலையில் பொன்னுசாமி நேற்று இரவு வேலையை முடித்து விட்டு வழக்கம்போல் கடையை பூட்டி சென்று உள்ளார். இந்த நிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் இவரது கடையில் இருந்து தீ பரவி வருவதாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் .


    சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடினர். மர சாமான்கள் மற்றும் எந்திரங்கள் அதிக அளவில் இருந்ததால் தீ கொளுந்து விட்டு எரிந்தது.

    தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் கடையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள மர பொருள்கள் மற்றும் மிஷின்கள் முற்றி லும் சேதம் அடைந்தன.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நல்ல வேலையாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து நடந்த பர்னிச்சர் கடையை சுற்றி ஏராளமான குடியிருப்புகளும் இருந்தன.

    • தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சி.
    • படுகாயமடைந்தவர்கள் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    தெற்கு பிரேசிலில் உள்ள போர்டோ அலெக்ரே நகரில் பயன்பாடு இல்லாமல், வீடு இல்லாதோருக்கு முகாமாக செயல்பட்டு வந்த ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    தீ விபத்து இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டுள்ளது. தீயில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், தீ விபத்துக்கான காரணத்தை விசாரிக்கவும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர்.

    இதுகுறித்து, மாநில ஆளுநர் எடுவார்டோ லைட், ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேயர் செபாஸ்டியாவோ மெலோ தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், "தீ விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

    ×